தொடர்மழை காரணமாக திருமங்கலம் பகுதி கண்மாய்கள் நிரம்பின….!!!
கடந்த சில நாட்களாக தமிழகமெங்கும் தொடர்மழை பெய்து வருகிறது. இதனையடுத்து திருமங்கலம் பகுதிகளிலும் கடந்த 10 நாட்களாக மழை பெய்து வருகிறது. திருமங்கலம் தாலுகா பகுதிகளில் 58 கண்மாய்களுக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அங்குள்ள 6 கண்மாய்கள் நிரம்பின.