மறுஉத்தரவு வரும் வரை இவைகளுக்கே தடை தொடரும்.. அரசு அறிவிப்பு.!

Default Image

தமிழகத்தில் செப்டம்பர் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், பொது முடக்கத்தின் 4-ஆம் கட்ட தளர்வுகளையும் அறிவித்துள்ளது.

அதன்படி, இனி தமிழகத்தில் பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இ-பாஸ்  ரத்து , சென்னையில் மெட்ரோ ரயில்கள் செப்டம்பர் 7 முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மறுஉத்தரவு வரும் வரை சிலவற்றிற்கு தமிழக அரசு தடை தொடரும் என அறிவித்துள்ளது. அதன்படி,

  • பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்விநிறுவனங்கள் இயங்க தடை .எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதோடு, அதை ஊக்குவிக்கலாம்.
  • திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் (Entertainment Amusement Parks), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை.
  • மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.
  • புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து (Suburban trains)
  • மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள் கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த உள்ள தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்