இந்த மனுக்களை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் -உயர் நீதிமன்றம்

Published by
லீனா

பராமரிப்பு தொகை, ஜீவனாம்சம் கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரித்து விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்ப நல நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு. 

கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை சேர்ந்த ஒரு தம்பதியினர் தங்களது மகனிடமிருந்து பராமரிப்பு தொகை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நிலுவையில் இருந்த நிலையில்,கடந்த 2018 ஆம் ஆண்டு தாய் தந்தைக்கு இடைக்கால நிவாரணமாக மாதம் ரூ.20 ஆயிரம் ரூபாய் வழங்குமாறு குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து மகன் தாக்கல் செய்த சீராய்வு மனுவை நீதிபதி வேல்முருகன் விசாரித்தார். அப்போது 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் பராமரிப்பு தொகை மற்றும் ஜீவனாம்சம் கூறும் வழக்குகளை குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரிக்க முடியும் என்று உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கு 2014 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ளதற்கு அதிருப்தி தெரிவித்தார். மேலும் பராமரிப்பு தொகை, ஜீவனாம்சம் கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரித்து விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்ப நல நீதிமன்றங்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் இடைக்கால உத்தரவு எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய முடியாது எனக்கூறி மகனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.  இந்த வழக்கை மூன்று மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டுமென்றும், மேலும் கால அவகாசம் நீட்டிக்கக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

2 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

15 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

20 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

20 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

20 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

20 hours ago