எமக்குள் தலைவன்-தொண்டன் உறவில்லை; அண்ணன்-தம்பி உறவே! இயக்கமே எனது குடும்பம்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் அவர்கள் குடியிருப்புக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. எனவே திருமாவளவன் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து காரில் ஏறும் பொழுது தனது ஷூ நனைந்து விடக்கூடாது என்பதற்காக அவரது தொண்டர்கள் உதவியுடன் நாற்காலி மீது நடந்து வந்து காரில் ஏறி சென்றுள்ளார்.
இந்த சம்பவம் பேசும் பொருளாகியுள்ள நிலையில், இதுகுறித்து விளக்கமளித்த திருமாவளவன் அவர்கள், தொண்டர்களை ஒருபோதும் மரியாதை குறைவாக நடத்தும் எண்ணம் எனக்கில்லை. என்னுடைய கால்கள் சேறு, சகதியை பார்க்காததில்லை. டெல்லி கிளம்புவதற்காக புறப்பட்டபோது ஷூ, ஷாக்ஸ் அணிந்திருந்ததாகவும், அது மழை நீரில் நனைந்துவிட்டால், 3 மணி நேரம் விமானத்தில் அப்படியே பயணிக்க முடியாது என்பதற்காக தொண்டர்கள் உதவியுடன் இரும்புச்சேர் மீது நடந்து காரில் ஏறிச் சென்றதாக விளக்கமளித்தார்.
இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘#ஆணவம் : அது என் இயல்பு இல்லை என்பது அவர்களுக்கும் தெரியும். ஆனால், இது அவர்களுக்கு ஒரு வாய்ப்பு. இயக்கத்தில் எமக்குள் தலைவன்-தொண்டன் உறவில்லை; அண்ணன்-தம்பி உறவே! இயக்கமே எனது குடும்பம்! இயக்கத் தோழர்களே எனது உறவினர்கள். காய்ச்சல் தலைவலி என படுத்தாலும் இவர்களே எனக்குத் துணை!’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…
வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…
சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…
சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…