அழிந்து வரும் அதிமுகவை காப்பாற்ற வாருங்கள் என்று சசிகலாவை வரவேற்று ராஜபாளையத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரால் அக்கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான பின்பு சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.ஆனால்,கடந்த சில மாதங்களாக அவரது ஆதரவாளர்களிடையே “நான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்” என்று அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.இதனையடுத்து,சசிகலாவுடன் பேசியதனால்,கட்சியின் விதிமுறைகளை மீறியதாக,அதிமுகவினர் சிலரை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும்,எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நீக்கியுள்ளனர்.
இந்நிலையில்,விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில்,சசிகலா அவர்களை,மீண்டும் அரசியலுக்கு வரவேற்கும் விதமாக,”அழிந்து வரும் அதிமுகவை காப்பாற்ற புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் தியாக தலைவியே வாருங்கள்….இவண் விருதுநகர் மாவட்ட அஇஅதிமுக உண்மை தொண்டர்கள்’ என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ள போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளன.
நகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களால் அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
துபாய் : இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் ஒரு போட்டியில் மோதுகிறது என்றாலே அந்த போட்டியின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு…
சென்னை : நடிகர் மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியை கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கி தான் அரசியல் வருவதாக அறிவித்தார்.…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோததின. இந்தப் போட்டி…
கொல்கத்தா : சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் (இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும்) தொடங்கி நடைபெற்று வருகிறது. …
கடலூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது கடலூருக்கு சென்றுள்ளார். அங்கு பல்வேறு முடிவுற்ற மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் …
சென்னை : இன்று திரைக்கு வந்துள்ள, தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள…