குடிமராமத்து பணிகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.
நீர்நிலைகள் அனைத்திலும் நடைபெறக்கூடிய குடிமராமத்து பணிகளில் முழு விபரங்களையும் அந்தந்த மாவட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோரின் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசு தரப்பில் இது குறித்த கேள்வி எழுப்பியுள்ளனர். குடிமராமத்து பணிகள் விபரங்களை அதிகாரிகள் உள்ளாட்சி அமைப்புகள் பார்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், பொதுமக்கள் பார்க்க இயலாது என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டது.
இதனைக் கேட்டறிந்த நீதிபதிகள் தற்பொழுது வரை எத்தனை குடிமராமத்து பணிகள் முடிக்கப்பட்டுள்ளது எனவும், நடைபெற்று வரக்கூடிய பணிகளின் நிலை என்ன என்பது குறித்தும் அரசு தரப்பில் விளக்கம் தெரிவிக்க வேண்டுமென்று உத்தரவிட்டதுடன், குடிமராமத்து பணிகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் எனவும் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…