திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொடரும் சின்னம் சிக்கல்…

Published by
மணிகண்டன்

DMK Alliance : மதிமுக, விசிக கட்சிகளுக்கு இன்னும் இந்திய தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்காமல் இருந்து வருகிறது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் வேட்புமனு தாக்கல் நிகழ்வு இன்றுடன் நிறைவடைய உள்ளது. இதனால் பிரதான அரசியல் கட்சிகள் தவிர மற்ற சிறு சிறு கட்சிகள் தங்களுக்கான தேர்தல் சின்னங்களை கேட்டு தேர்தல் ஆணையத்தை முறையிட்டு வருகின்றனர்.

மதிமுக – பம்பரம் :

திமுக கூட்டணியில் உள்ள மதிமுக கட்சிக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு வைகோ மகன், துரை வைகோ போட்டியிடுகிறார். மதிமுகவின் பொது சின்னமாக பம்பரம் சின்னம் அறியப்படுகிறது. இதனால் தங்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என மதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கில் பதில் கூறிய தேர்தல் ஆணையம், ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடும் கட்சிக்கு அவர்கள் கேட்கும் சின்னத்தை ஒதுக்க முடியாது என கூறியது. இதனால் அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என மதிமுக தலைமை ஆலோசித்து வருகிறது.

விசிக – பானை :

அதே போல, திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தங்கள் கட்சி சின்னமாக அறியப்படும் பானை சின்னத்தை கேட்டு தேர்தல் ஆணையத்தை அணுகி இருந்தனர்.  தேர்தல் நெருங்கும் வேளையில் தற்போது வரையில் சின்னம் குறித்து எந்த நிலைப்பாடும் எட்டப்படாத நிலையில், தற்போது டெல்லி உயர்நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது.

தமிழகம் உட்பட ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் விசிக கட்சி சார்பில் குறிப்பிட்ட தொகுதிகளில் வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். அதனால் தங்களுக்கு பானை சின்னத்தை பொது சின்னமாக அறிவிக்க வேண்டும் என அவசர வழக்காக டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசிக தாக்கல் செய்துள்ளது.

திருமா அதிருப்தி :

இதற்கிடையில், விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது. பாஜக ஆதரவு கட்சிகளுக்கு உடனுக்குடன் சின்னங்கள் ஒதுக்கப்படுகிறது. ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவதில் தாமதம் ஆகிறது என தனது விமர்சனத்தை முன்வைத்தார்.

பாஜக கூட்டணி கட்சிகள் :

தமிழகத்தில் பாஜக கூட்டணியில் 2 தொகுதியில் போட்டியிடும் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் 3 தொகுதியில் போட்டியிடும்  தமாகா கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Recent Posts

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் : “அமித் ஷா பதவி விலகனும்”… திருமாவளவன் கடும் கண்டனம்!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…

45 minutes ago

‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!

பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்தில்…

47 minutes ago

“மோடி கிட்ட போய் சொல்லு”… கணவனை இழந்து கெஞ்சிய பெண்ணிடம் பயங்கரவாதி சொன்ன விஷயம்?

பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…

2 hours ago

பஹல்காமில் 26 பேரை கொன்ற பயங்கரவாதிகளின் வரைபடங்கள் வெளியீடு.!

பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான…

2 hours ago

பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன்…

2 hours ago

பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!

பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம்…

3 hours ago