“பெரியாருக்கு சிலை வைப்பதில் தவறில்லை” – பொன்.ராதாகிருஷ்ணன்..!

Default Image

பெரியாருக்கு சிலை வைப்பதில் தவறில்லை. பொதுவாக மறைந்த தலைவர்களுடைய நல்ல கருத்துக்களை நாம் ஏற்று பின்பற்ற வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நாகர்கோவில் மாநகர் வடக்கு மண்டல் சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன், பெரியாருக்கு சிலை வைப்பதில் தவறில்லை. பொதுவாக மறைந்த தலைவர்களுடைய நல்ல கருத்துக்களை நாம் ஏற்று பின்பற்ற வேண்டும். வ.உ.சி சிலை, மணிமண்டபம், தூத்துக்குடி மாவட்டத்தில் ஓர் ஆண்டில் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு வ.உ.சி பெயர் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

கீழடி போல் குமாரிக் கண்டம் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆய்வு நடந்தால் தமிழன் உலகின் முதல்நிலை மனிதராக உயர்ந்து இருப்பான் என்பதில் சந்தேகமில்லை. தமிழை வளர்த்த மதுரையை தமிழின் தலைநகராக அரசு அறிவிக்க வேண்டும் என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்