தமிழக அரசை குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை – கே.எஸ் அழகிரி

Published by
பாலா கலியமூர்த்தி

உலக முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. இந்த வைரஸ் சாமானியர்கள் முதல் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் வரை அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. இதனிடையே காங்கிரஸ் தொண்டர்கள் தினமும் 50 பேரிடமாவது தொலைபேசி மூலம் கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பிரசாரத்தை நடத்தி வருகிறார் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். இதையடுத்து தமிழக அரசின் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுபட்டது. இதற்கு பதிலளித்த அவர், தமிழக அரசை குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை. கொரோனாவைத் தடுப்பதற்கு அவர்களால் என்ன முடியுமோ அதைச் செய்து வருகிறார்கள் என்று கூறினார்.

ஆனால், ஒரே நாளில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஊரடங்கு செய்ததுதான் தவறு என்று குறிப்பிட்டார். சென்னையில் பகுதி பகுதியாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்திருந்தால் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் கோயம்பேட்டில் குவிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் இந்த அதிரடி அறிவிப்பு மக்களை பதற்றப்படுத்திவிட்டது என தெரிவித்தார். பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்கு நடந்தே வந்தவர்கள் பற்றிய செய்தியெல்லாம் வருகிறது. மோடியைப் போல எடப்பாடியும் மக்களைத் திணறடித்துவிட்டார். இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது என்பதற்காக நாங்கள் அமைதி காக்கிறோம் என கே.எஸ் அழகிரி தெரிவித்தார். 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

5 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

7 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

7 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

7 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

8 hours ago