திமுக-வை பற்றி குற்றம்சாட்ட ஒரு துளி அளவும் உரிமை கிடையாது- மு.க.ஸ்டாலின்

Default Image

3 வேளாண் சட்டங்களை கொண்டு, இந்திய முழுவதும் உள்ள விவசாயிகளை துன்புறுத்தும் மோடிக்கு, திமுக-வை பற்றி குற்றம்சாட்ட ஒரு துளி அளவும் உரிமை கிடையாது.

விழுப்புரத்தில் நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரத்தில் உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியில் இருந்த போது அனைத்து மாவட்டங்களிலும் அராஜகாதை கட்டவிழ்த்து விட்டதாகவும், அதில் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழக பெண்கள் தான் என மோடி கூறியுள்ளார். ஆதாரம் இல்லாமல் மோடி பேசி வருகிறார். 2002-ம் ஆண்டில் நடத்த குஜராத்தில் நடந்த பச்சை படுகொலையை விட, இங்கு ஒன்றும் நடக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

குஜராத்தை விட்டுவிட்டு டெல்லிக்கு வந்து விட்டால், அந்த பாவங்கள் துடைக்கப்பட்டு விடாது என்றும், 3 வேளாண் சட்டங்களை கொண்டு, இந்திய முழுவதும் உள்ள விவசாயிகளை துன்புறுத்தும் மோடிக்கு, திமுக-வை பற்றி குற்றம்சாட்ட ஒரு துளி அளவும் உரிமை கிடையாது என தெரிவித்துள்ளார். நேற்று பிரதமர் மோடி கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக-வை விமர்சித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்