அதிமுகவில் எந்த பிரச்னையும் இல்லை.! இபிஎஸ் ஆலோசனை கூட்டத்திற்கு பின் ஜெயக்குமார் பேச்சு.!

Default Image

உட்கட்சியில் எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. ஓபிஎஸ், தினகரன், சசிகலா பற்றி பேசி நாங்கள் நேரத்தை வீணடிக்கவில்லை. – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். 

இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. அதன் பிறகு முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் பேசுகையில், உட்கட்சியில் எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. ஓபிஎஸ், தினகரன், சசிகலா பற்றி பேசி நாங்கள் நேரத்தை வீணடிக்கவில்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இபிஎஸ் ஆலோசனைகளை கொடுத்தார். என கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. அது நேரம் வருபோது தெரியும் என கூறினார். அடுத்து, ஆளும் திமுக அரசு பற்றி தங்களது விமர்சனத்தை முன்வைத்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்