திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் கிடையாது என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் அக்கட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பிறகு சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், திமுக கூட்டணியில் எந்த பிரச்னையும் கிடையாது என்றும் விரைவில் திமுகவுடனான தொகுதி பங்கீடு குறித்து நல்ல முடிவு எட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, திமுக – காங்கிரஸ் இடையே தொடர் பேச்சுவார்த்தை நடத்தியும் கூட இதுவரை தொகுதி பங்கீடு குறித்த முழுமையான ஒப்பந்தம் நிறைவு பெறவில்லை, தொடர்ந்து இரு தரப்பிலும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விரைவில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பேட்டியளித்துள்ளார்.
கூட்டணியில் இழுபறி நீடித்து வரும் நிலையில், காங்கிரஸுக்கு 18 லிருந்து 22 வரை தொகுதி ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. வரும் 12ம் தேதி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிலை உள்ளதால், திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்ய வேண்டும் என்றும் கட்டாயம் உள்ளது. இதனால் திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு விரைவில் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விழுப்புரம் : சாதிய பாகுபாடு , அதனால் ஏற்பட்ட இருதரப்பு மோதல் காரணமாக 22 மாதங்களாக மூடி இருந்த திரௌபதி…
சென்னை : தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் (அதிமுக, திமுக) கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருந்தாலும் , தேர்தல் முடிந்த…
டெல்லி : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…