#Breaking: தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க தற்பொழுது வாய்ப்பில்லை- அமைச்சர்

Default Image

தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க தற்பொழுது வாய்ப்பில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக, நாள் ஐந்திற்கு 4000க்கும் மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆயினும், பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் ஆகியவை மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது தற்பொழுது வாய்ப்பில்லை என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா பாதிப்பு குறைவதை பொறுத்து திரையரங்குகளை திறப்பது பற்றி முதல்வர் பழனிச்சாமி முடிவெடுப்பார் எனவும், வெளிநாடுகளைப் போன்று இடைவெளி விட்டு படம் பார்த்தால், உரிமையாளருக்கு உரிய லாபம் கிடைக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Black paint DMK
sajjan kumar
Match abandoned due to rain
Wasim Akram
GK Mani home wedding ceremony - Jason sanjay - Vijay sethupathi - Tamilnadu CM MK Stalin
tvk vijay ntk seeman