இந்த குழுவில் ஜூனியர், சீனியர் என்பது கிடையாது – அமைச்சர் செல்லூர் ராஜு

Default Image

கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, அதிமுக தலைமையகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அதிமுகவின் வழிகாட்டுதல் குழு பற்றிய அறிவிப்பை முதல்வர் பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து, அதிமுக வழிகாட்டுதல் குழுவில் இடம்பெற்ற 11 பேரில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக 5 பேரும், ஈபிஎஸ்-க்கு ஆதரவாக 6 பேரும் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, ‘வழிகாட்டுதல்  குழுவானது அனைத்து  சமுதாய மக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

அதிமுகவை ஒருங்கிணைக்க இன்னும் நிறைய குழுக்கள் அமைக்கப்பட உள்ளது. அதிமுக வழிகாட்டுதல் குழுவில் ஜூனியர், சீனியர் என்பது கிடையாது.’ என  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்