தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த தனது கருத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை – நடிகர் ரஜினிகாந்த்!

Published by
Rebekal

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு குறித்த தனது கருத்திற்கு எந்த ஆதாரமும் தன்னிடம் இல்லை என நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, 13 பேர் உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நீதி விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற தமிழக அரசு நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிடப்பட்டது. இந்த கமிஷன் சம்பந்தப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

27 கட்டமாக நடைபெற்ற விசாரணையில் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயம்பட்டவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், வழக்கறிஞர்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் என பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தெரிவித்துள்ள வழக்கறிஞர் அருள் வடிவேல் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர் 27 வது கட்ட விசாரணையில் 48 பேர் ஆணையம் முன்பு ஆஜராகி தங்களது வாக்குமூலங்களை பிரமாண பத்திரங்களை அளித்துள்ளதாகவும், ஆயிரத்துக்கும் அதிகமான பேருக்கு துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டு 700க்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்ட விசாரணையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினரை விசாரிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், கொரோனா தொற்று குறைந்த உடன் நடிகர் ரஜினிகாந்திடம் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ஒரு நபர் ஆணையம் நிச்சயம் விசாரணை நடத்தும் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் ஏற்கனவே ரஜினிகாந்த் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறியதற்கு அவர் வழக்கறிஞர் மூலமாக தனது பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதில் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது எதேச்சையாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தான் தெரிவித்த கருத்திற்கு தன்னிடம் எந்த ஆதாரமும் இல்லை என அந்த மனுவில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார். ஆனால் கொரோனா தொற்று குறைந்த பின்பு நிச்சயம் ரஜினிகாந்திடம் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

பரபரப்பாக மேட்ச்.., சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி.!

பரபரப்பாக மேட்ச்.., சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…

3 hours ago

நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!

நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

4 hours ago

மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…

6 hours ago

“விஜய்யிடமிருந்து முஸ்லிம்கள் தள்ளி இருங்கள்” – அகில இந்திய முஸ்லிம் ஜமாத்.!

சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…

6 hours ago

அதிரடி காட்டுமா ராஜஸ்தான்.? பேட்டிங் செய்ய களமிறங்கும் டெல்லி.! பிளேயிங் லெவன் இதோ…

டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…

8 hours ago

“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!

சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…

8 hours ago