9,10,11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடைபெறாது என கண்ணப்பன் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் தேர்ச்சி என அறிவித்தார்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று ஒரு சுற்றறிக்கையில் 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வை நடத்தி மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும், ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் செய்முறை தேர்வை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, 9,10,11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடைபெறாது என பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார். முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெற முதன்மை கல்வி அதிகாரிக்கு கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…