பாலியல் புகாரில் கைதான ஆசிரியர் கோபாலன் தவறு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளது என சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசித்து வந்த ஆயுதப் படை தலைமைக் காவலர் சதீஷ் பாபு என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆறுதல் கூறினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சங்கர் ஜிவால், அனைத்து போக்சோ வழக்குகளும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகின்றன.
பாலியல் புகாரில் கைதான ஆசிரியர் கோபாலன் தவறு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளது என தெரிவித்தார். பாலியல் புகாரில் யார் பாதிக்கப்பட்டிருந்தாலும் உடனடியாக புகார் அளிக்கலாம். பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். பத்மா சேஷாத்ரி பள்ளியில் இன்னும் இருவர் புகார் அளித்துள்ளனர்.
சமூக வலைதளங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் மூலமாக புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் துறையில் ஆசிரியராக பணியாற்றிய ராஜகோபாலன் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டது. மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.
மாணவிகளிடம் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க அவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைந்ததுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…