மூன்றே மூன்று கேள்விகள் தான்.! தெறித்து ஓடிய தமிழிசை!

Published by
Venu

தனியார் தொலைக்காட்சி நெறியாளர் 3 கேள்விகளில் தமிழிசையை எழுந்து செல்ல வைத்த இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும், தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என பலமான கூட்டணியை வைத்து போட்டியிட உள்ளது.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் தூத்துக்குடி மக்களவை தேர்தலுக்கான வேட்பாளராக போட்டியிடுகிறார் அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை போட்டியிடுகிறார்.அதேபோல் திமுக சார்பாக கனிமொழி போட்டியிடுகிறார்.

இந்நிலையில் பாஜகவின் தூத்துக்குடி மக்களவை தேர்தலுக்கான வேட்பாளராக போட்டியிடும் தமிழிசை தனியார் தொலைக்காட்சி ஒன்றிக்கு பேட்டி அளிக்க சென்றார்.அப்போது அந்த நெறியாளர் கேட்ட 3  கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் திணறியது சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முதலாவதாக நெறியாளர் தமிழிசையிடம் கேட்ட கேள்வி,தேர்தல் அறிக்கையில் ஸ்டெர்லைட் பிரச்சினை குறித்து  எந்த ஒரு அறிவிப்பும் இல்லை என்று கேள்வி எழுப்பினார்.இதற்கு பதில் அளித்த அவர் ஸ்டெர்லைட் விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது என்றும் வழக்கில் உள்ள ஒன்றை மட்டும் எப்போதும் கேள்வி கேட்காதீர்கள் என்று தெரிவித்தார்.

அடுத்த கேள்வியாக நீட் தேர்வு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில்  பியூஸ் கோயல் அது குறித்து வாக்குறுதி அளித்துள்ளார் என்று கேள்வி எழுப்பினார்.அதற்கும் தமிழிசை கூறுகையில்,நீட் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது என்று சமாளித்தார்.

Image result for tamilisai

இறுதியாக ஒரு கேள்வி என்று கேட்டார்.அதாவது உங்கள் கூட்டணி கட்சிகள் அனைத்தும் எழுவர் விடுதலைக் குறித்து ஒரே கருத்துடன் இருக்கிறார்கள்?அது பற்றி உங்கள் கருத்து என்று கேட்க  அதற்கு தமிழிசை ஒரே ஒரு நிமிஷம் தம்பி நீங்கள் நாளைக்கு வருகிறீர்களா என்று கிளம்பி விட்டார்.

வெறும் 3 கேள்விகளில் தமிழிசையை எழுந்து செல்ல வைத்த இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

Published by
Venu

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

8 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

8 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

8 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

8 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

8 hours ago