தலைமை செயலகத்தில் முற்றுகை போராட்டம்.? ஒப்பந்த செவிலியர்களின் அடுத்த நகர்வு.!

Default Image

சென்னையில் போராட்டத்தில் ஈடுபடும் செவிலியர்கள் தலைமை செயலகத்தை முற்றுகையிடபோவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பையமர்த்தப்பட் செவிலியர்களுக்கு அண்மையில் பணி நிறுத்தப்பட்டதை அடுத்து, அவர்கள் பணி நிரந்தரம் கோரி சென்னையில் 10 நாட்களாக தொடர் போராட்ட்டம் வருகின்றனர்.

 இதற்கிடையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உடன் போராட்டத்தில் ஈடுப்பட்ட செவிலியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதுவும் தோல்வியில் முடிந்ததால் மீண்டும் போராட்டம் தொடங்கியது.

இந்நிலையில் இன்று அவர்கள் கொரோனா காலத்தில் பணியில் அணிந்திருந்த PPE எனப்படும் கவச உடை அணிந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் எழுபூர் ரயில் நிலையதில் இருந்து தலைமை செயலகம் நோக்கி, சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டசபை நடைபெறும் சமயத்தில் இந்த முற்றுகை போராட்டம் பற்றிய தகவல் வந்துள்ளதால், காவல்துறையினர் அந்த பகுதியில் முடிந்த அளவு தடுக்க காவல் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்