சென்னையில் 4 கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் மட்டுமே உள்ளது- சென்னை மாநகராட்சி!

Default Image

சென்னையில் நான்கு தெருக்கள் மட்டுமே கொரானா கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் தமிழகம் முழுவதும் அதிகரித்து வந்தாலும், அதிக அளவில் தமிழகத்தில் கொரானா பாதித்த இடமாக இருந்தது சென்னை தான். இந்நிலையில் தற்போது சென்னையிலும் இயல்பு வாழ்க்கை திரும்பி வரும் நிலையில் நான்கு தெருக்கள் மட்டுமே கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதியாக உள்ளதாக சென்னை மாநகராட்சி தற்போது அறிவித்துள்ளது.
மேலும் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் இந்த நான்கு கட்டுப்பாட்டு பகுதிகளும் மாதவரம் மண்டலத்தில் இருப்பதாகவும், மீதமுள்ளவை 14 மண்டலங்களில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் எதுவும் இல்லை எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்