அதிமுகவில் வேஷ்டி கட்டும் ஆண்கள் உண்டு கோஷ்டி சேர்க்கும் ஆட்கள் இல்லை – ஓபிஎஸ்

Published by
பாலா கலியமூர்த்தி

சாமானியரும் முதல்வர், துணை முதல்வராக முடியும் என நிரூபித்தது அதிமுகதான் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். உரை.

அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், எனக்கு மட்டும் விசுவாசமாக இருங்கள் என்று நான் சொன்னதில்லை. கட்சிக்கு மட்டுமே அனைவருமே விசுவாசமாக இருங்கள் என்று சொல்கிறேன். சாமானியரும் முதல்வர், துணை முதல்வராக முடியும் என நிரூபித்தது அதிமுகதான்.

எந்த கட்சியிலும் இந்த சுதந்திரம் கிடையாது. வெற்றி ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும். கபட வேடதாரிகள் நல்ல பிள்ளைகள் போல வேடம் போடுகின்றனர். திமுகவின் துரோகங்களை மக்களிடம் எடுத்துச்சொல்லுங்கள். மக்கள் தான் எஜமானர்கள் நாம் எல்லோரும் பணியாற்றும் சேவகர்கள். இங்கே யாரும் யாருக்கும் அடிமையில்லை. யாரும், யாரையும் கட்டுப்படுத்த முடியாது. எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

மக்களின் மகத்தான ஆதரவை சிந்தாமல் சிதறாமல் வாக்குகளாக மாற்ற வேண்டும். அதிமுக ஒரு கோட்டை அதை யாரும் அசைக்க முடியாது. எங்கோ ஒரு மூளையில் இருந்த நம்மை இங்கு அமர வைத்தது மாண்புமிகு மறைந்த முன்னாள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அதிமுகவிற்கும், ஜெயலலிதா அம்மையாருக்கும் நன்றிக் கடன் ஆற்ற வேண்டும். நாம் மாளிகையில் இருக்கவில்லை மக்களோடு மக்களாக இருக்கிறோம். தமிழகத்தில் 30 ஆண்டு காலம் ஆட்சி செய்த கட்சி அதிமுக மட்டுமே.

நம்மை யாராலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது. சாதாரண தொண்டர்களால் வலுவாக உருவாகியுள்ள இயக்கம் அதிமுக. அதிமுகவில் வேஷ்டி கட்டும் ஆண்கள் உண்டு கோஷ்டி சேர்க்கும் ஆட்கள் இல்லை. அதிமுக தொண்டர்கள் நல்லவர்கள் வல்லவர்கள் என்ற பெயர் உள்ளது. 2021ஆம் ஆண்டு தமிழகத்தில் புதிய புரட்சி உருவாகும். சட்டமன்ற தேர்தலுக்காக ஓடி, ஓடி உழைக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. கொரோனாவை விட மோசமான வைரஸ் ஆக திமுக திகழ்கிறது என்று துணை முதல்வர் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்! 

நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…

32 minutes ago

சிறுமி மீது தவறு? சர்ச்சை பேச்சு எதிரொலி.! மயிலாடுதுறை ஆட்சியர் அதிரடி மாற்றம்!

மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…

2 hours ago

தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…

4 hours ago

AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…

5 hours ago

“கைதுக்கு நான் பயப்படவில்லை. இப்போதே விசாரணைக்கு தயார்” சீமான் பரபரப்பு பேட்டி!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…

5 hours ago

“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!

தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…

8 hours ago