பெண் குழந்தைகளே நம் நாட்டின் எதிர்காலம் என்று அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் உரை.
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக 29-வது பட்டமளிப்பு விழா மதுரை காமராஜர் பல்கலைக் கழக வளாகத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக ஆளுநர் மற்றும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்துகொண்டு முனைவர் பட்டம் மற்றும் பிற பாடப்பிரிவுகளில் பயின்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினார்.
இதன்பின் பேசிய ஆளுநர், நாட்டின் பிற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் பெண்கள் வளர்ச்சிக்கு பல திட்டங்கள் உள்ளன. சமூக நீதியின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட பல திட்டங்களால் ஆண்களை விட அதிகமாக பெண்கள் கல்வி கற்று வருகின்றனர். பெண் குழந்தைகளே நம் நாட்டின் எதிர்காலம்.
உலகின் அனைத்து துறைகளிலும் தமிழ் பெண்கள் சாதித்து வெற்றி பெற வேண்டும். சர்வதேச அளவில் இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது தமிழ்நாட்டை சேர்ந்த பெண்கள் என்பது மறுக்க முடியாத உண்மை என்று புகழாரம் சூட்டினார்.
மேலும், பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவுடன் உரையாடிய ஆளுநர் மாணவர்களை தொழில் முனைவோர்களாகவும், வேலைவாய்ப்புகள் பெறும் வகையில் திறன் மேம்பாட்டுக் கல்வி திட்டங்களை ஊக்குவிக்க வலியுறுத்தினார்.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…