தமிழகத்தில் மொத்தம் 3,724 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மாவட்ட வாரியாக பட்டியலும் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் கூடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவ்வாறு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறித்த பட்டியலை ஆய்வு செய்து வாரந்தோறும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இதுவரை தமிழகத்தில் 3724 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு பட்டியல் வெளியிட்டுள்ளது.
அதன்படி, அதிகளவில் தஞ்சாவூரில் தான் 221 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தேனியில் அதிகபட்சமாக 200, நீலகிரியில் 144, தூத்துக்குடியில் 142, திருவாரூர் மற்றும் தென்காசியில் 117 என மாவட்ட வாரியாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதோ அந்த பட்டியல்,
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…