தேன்மொழியின் உயிருக்கு ஆபத்தில்லை – ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு

Default Image

தேன்மொழியின் உயிருக்கு ஆபத்தில்லை என்று ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
நேற்று ஈரோட்டைச் சேர்ந்த சுரேந்தர் என்பவர் தேன்மொழி என்ற  இளம்பெண்ணை அரிவாளால் வெட்டினார்.அரிவாளால் இளம்பெண்ணை வெட்டிய பிறகு சுரேந்தர் ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். சுரேந்தர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .மேலும் படுகாயமடைந்த தேன்மொழியும் அனுமதிக்கப்பட்டார்.
தேன்மொழி சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு நேரில் சென்று நலம் விசாரித்தார்.அப்போது அவர் கூறுகையில், தேன்மொழியின் உயிருக்கு ஆபத்தில்லை . விரைவில் அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படும் என்று ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்