அடடா…வித்தியாசமாக வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர் நீதிபதி – என்ன காரணம் கூறினார் தெரியுமா?

Published by
Castro Murugan

தேனி:ஆண்டிபட்டி பேரூராட்சியை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் நீதிபதி கையில் வாழைப்பூவுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள்,490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள்,8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது.இதற்கான வேட்புமனுக்கள் கடந்த 28-ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து,முக்கிய கூட்டணி கட்சிகளின் இடப் பங்கீடு முடிந்து வேட்பாளர் பட்டியல்கள் படிப்படியாக அறிவிக்கப்பட்டன.அதே சமயம்,இதுவரை 37518  வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நேற்று மட்டும் 27,365 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதனையடுத்து,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் காலஅவகாசம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இதனால்,அனைத்து மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சி அலுவலகங்களில் இன்று வேட்புமனு தாக்கல் செய்வோர் கூட்டம் அலைமோதுகிறது.

இதற்கிடையில்,தேனி மாவட்டம்,ஆண்டிபட்டி பேரூராட்சியில் 14 வது வார்டில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் நீதிபதி என்பவர்,கையில் வாழைப்பூவுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.அவர் ஒரு கையில் வாழைப்பூவுடனும், மற்றொரு கையில் அவரது அப்பா பயன்படுத்திய கைத்தடியை பிடித்தபடியும் தலையில் தலைப்பாகை கட்டியும் வந்து நேற்று வேட்புமனு தாக்கல் செய்த நிலையில்,அங்கிருந்த மற்ற வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

மேலும்,வாழைப்பூ கொண்டுவந்ததற்கு விளக்கம் இதுகுறித்து நீதிபதி கூறுகையில், “எனது தந்தை பயன்படுத்திய கைத்தடியை நான் வீர வாளாக கருதுகிறேன்.மேலும், மற்றும் ஒவ்வொரு குடும்பமும் வாழையடி வாழையாக உருவெடுத்து வருவதை குறிப்பிடவே வாழைப்பூவுடன் வந்துள்ளேன்.மக்கள் சேவை செய்வதில் நான் உங்களில் ஒருவனாக,உன்மைத் தொண்டனாக இருப்பேன்.எனவே மக்கள் என்னை  வெற்றி பெறச் செய்ய வேண்டும்”,எனக் கேட்டுக் கொண்டார்.

Recent Posts

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…

4 hours ago

”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!

குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…

5 hours ago

“புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.., தேர்தல் முகவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்” – ஆதவ் அர்ஜுனா.!

சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…

5 hours ago

கோவையே அதிருது.., “யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை” – என்.ஆனந்த்.!

கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…

5 hours ago

MIv s LSG: ரிக்கல்டன் – சூர்யகுமாரின் வெறித்தனமான ஆட்டம்.., மிரண்டு போன லக்னோவுக்கு பெரிய இலக்கு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

6 hours ago

“இந்தியாவை தாக்க 130 அணுகுண்டுகள் தயார்” – பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு எச்சரிகை.!

ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…

7 hours ago