தேனி காட்டுத் தீயில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு?

Default Image

8 பேர்  தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி,உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 15 பேர் தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் அருகே குரங்கணி மலைப்பகுதி உள்ளது. கடந்த ஒரு வார காலமாக அங்கு காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதை அறியாது, கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய ஊர்களைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகளும், சென்னையைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும், இருபிரிவுகளாக குரங்கணிக்குச் சென்று அங்கிருந்து கொழுக்கு மலைக்குச் சென்றனர்.

சனிக்கிழமை இரவு குரங்கணியில் தனியார் ரிசார்டுகளில் தங்கி ஓய்வெடுத்த அவர்கள், ட்ரக்கிங் எனப்படும் மலையேற்றப் பயிற்சிக்காக, கொழுக்கு மலைக்கு நேற்று சென்றுள்ளனர். அப்போது, காற்றின் வேகத்தால், தீ பரவியதை அறியாது, மலையேற்றப் பயிற்சிக்காக சென்ற 36 பேரும், காட்டுத்தீயில் சிக்கிக் கொண்டனர்.

இதையறிந்த விரைந்த வனத்துறையினர், மலைக்கிராம மக்கள், காவல்துறையினர், மீட்பு படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்ட போதும், இதுவரை 15 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர் பாக்யராஜ் என்பவர், காட்டுத்தீயில் சிக்கி இதுவரையில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்தார். இருப்பினும், உயிரிழப்பு குறித்து அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்