இந்த மண்ணில் அவர்களின் ஜம்பம் எடுபடாது – திருமாவளவன்

Default Image

மதுரை எய்ம்ஸ் வேலையை தொடங்காத போது, பாதிக்கு மேல் முடிந்துவிட்டது என ஜே.பி.நட்டா எப்படி சொன்னார்? என திருமாவளவன் கேள்வி. 

விடுதலை சிறுத்தைகள்  கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நினைவு இல்லத்தில் பத்மஶ்ரீ சிவந்தி ஆதித்தனாரின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்திநார்.

அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன், மதுரை எய்ம்ஸ் வேலையை தொடங்காத போது, பாதிக்கு மேல் முடிந்துவிட்டது என ஜே.பி.நட்டா எப்படி சொல்லினார்?; இந்த மண்ணில் அவர்களின் ஜம்பம் எடுபடாது என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், அதிமுக-பாஜக கூட்டு சதியை முறியடித்து ஆட்சி அமைத்தது தான் திமுக அரசு. அதை குறைவாக எடை போடக்கூடாது; கருணாநிதிக்கு வரலாற்று சின்னம் அமைப்பது தேவைதான். அதை எந்த அளவில்,என்ன செலவில் செய்வது என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்