திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்! – திருமாவளவன்

Default Image

திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் “மனுதர்மம்” சனாதன நூலைத் தடைசெய்ய மத்திய, மாநில அரசுகளை வலிறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில், 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். 

இந்நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ‘பெரியார் பற்றிய இணையவழி கருத்தரங்கில், நான் பேசியதை துண்டித்து வெளியிட்டிருக்கிறார்கள் என்றும், பெண்கள் எனது 40 நிமிட உரையை முழுமையாக கேட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பெண்கள் இழிவுபடுத்தினோம் என்று அரசியல் ஆதாயத்திற்காக, என்மீது அபாண்டமாக பழி சுமத்துகிறார்கள் என்றும், அவர்களின் நோக்கம் என்னை விமர்சிக்க வேண்டும் என்பதல்ல, திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதே.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்