கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே ஒரே நாளில் 4 கோவில்களில் திருட்டு….!

Published by
பால முருகன்

கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே ஒரே நாளில் 4 கோவில்களில் மர்ம நபர்கள் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கெலமங்கலத்திலிருந்து உத்தனப்பள்ளி செல்லும் சாலையில்,ஒரு மாரியம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் நேற்று சில மர்ம நபர்கள் கோவிலின் சுவற்றின் மீது ஏறி அங்குள்ள அம்மன் சிலையின் கழுத்திலிருந்த இரண்டரை பவுன் தாலி செயின், மற்றும் உண்டியல் பணம் , கம்மல், மற்றும் அம்மனுக்கு அலங்கரிக்க வைத்திருக்கும் புடவைகள் அனைத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

இந்நிலையில் அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலதில் உள்ள விநாயகர் கோவில் உண்டியல் மற்றும் தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள, சித்தலிங்கேஸ்வர சுவாமி கோவிலின் உண்டிலை உடைத்து, மர்ம நபர்கள் காணிக்கை பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

அதே பகுதியில் உள்ள ஐயப்பன் கோவில் உண்டியல் காணிக்கையையும் திருடி சென்றுள்ளனர். மேலும் இந்த நான்கு கோவில்களில் திருட்டு சம்பவம் நடந்ததால், அப்பகுதிலுள்ள பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இது தொடர்பாக கெலமங்கலம் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி போலீசார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன், 52 சிசிடிவி கேமராக்கள் கோவில்களுக்குள் பொருத்தப்பட்டன.

இந்நிலையில் அதனை தொடர்ந்து சிசிடிவி கேமரா வைத்த மறுநாள் கோவிலில் திருட்டு நடந்துள்ளது, மேலும் அந்த மர்ம நபர்கள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், அதை வைத்து, கெலமங்கலம் யார் யார் என்பதை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Published by
பால முருகன்

Recent Posts

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…

15 minutes ago

ரேஸிங்கில் தீவிரம் காட்டும் அஜித் குமார்.! தீவிர பயிற்சி வீடியோ…,

பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…

17 minutes ago

பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!

சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…

1 hour ago

வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. மேலும்,…

2 hours ago

நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…

2 hours ago

உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!

டெல்லி :  உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…

3 hours ago