புதிய கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, திரையரங்குகளில் படத்தை தொடர்ந்து திரையிட முடிவு செய்துள்ளதாக திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். இந்த புதிய கட்டுப்பாடுகள், இன்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்லும் பேருந்துகள், இரவு 8 மணிக்குள் சென்றடையும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடுகள், ஏப்ரல் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, திரையரங்குகளை மூடலாமா? நேரங்களை மாற்றலாமா? என்ற குழப்பம் நிழுவிவந்த நிலையில், இதுகுறித்து திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் ஆலோசனை நடத்தினார்கள்.
அதன்பின் புதிய கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு திரையரங்குகளில் படத்தை தொடர்ந்து திரையிட முடிவு செய்துள்ளதாக அறிவித்தனர். மேலும், புதிய அரசு அமைந்தவுடன் தங்களின் கோரிக்கைகளை முன்வைக்கவும் திரையரங்க உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…