விரைவில் தியேட்டர்கள் திறக்கப்பட வேண்டும் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸின் தீவிரம் நாடு முழுவதும் அதிகரித்து கொண்டே சென்றதால், கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதிலும் தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் அரசு தற்போது சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. தற்போது நாடு முழுவதும் மீண்டும் இந்த தியேட்டர்களை திறப்பது குறித்து மத்திய அரசு கடந்த எட்டாம் தேதி ஆலோசனை நடத்தியது. இதை தொடர்ந்து ஐபிஎல் ,ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தியேட்டர்களில் ஒளிபரப்ப அனுமதி தேவை என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கூறியிருந்தது. 15ஆம் தேதி மீண்டும் இந்த கூட்டம் நடக்க இருப்பதால் தியேட்டர் உரிமையாளர்கள் மத்திய அரசிடம் மேலும் சில கருத்துக்களை வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து பேசிய வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அவர்கள், விரைவில் தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க வேண்டும் என கோரி மனு அளித்துள்ளார். அதில் தமிழகத்தில் திரையரங்குகளை உடனடியாக திறந்தால் தான் அதை நம்பி உள்ள வணிகர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாது என அவர் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும், தங்குவதற்கும் அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…