தோள்சீலை 200ஆம் ஆண்டு விழாவை நடத்துவது மூலம் நம் நாட்டில் எந்த மாதிரியான இழிநிலை இருந்தது என்பதையும் அதனை வீரமிகு போராட்டத்தால் எப்படி அடித்து நொறுக்கப்பட்டது என்பதையையும் இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும். – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
பெண்கள் தோள் சீலை அணிய கூடாது என, அதாவது, குறிப்பிட்ட வகுப்பை சேர்ந்த பெண்களை தவிர மற்ற யாரும் மார்பை மறைக்கும் படியான உடைகளை அணிய கூடாது என 1800 காலகட்டத்தில் ஓர் இழிநிலை நிலவியது. அதனை எதிர்த்து பெண்கள் உரிமைக்காக 1822-ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானப் பகுதியில் தோள்சீலைப் போராட்டம் நடைபெற்றது. முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தின் மூலமாகவே பெண்களுக்கு தோள்சீலை அணியும் உரிமை கிடைத்தது.
இந்த வீரமிகு போராட்டத்தை நினைவு கூறும் வகையில் நாகர்கோவிலில் விழா நடைபெற்றது. இந்த தோள்சீலை போராட்ட்டம் 200ஆம் ஆண்டு நிறைவு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் பாலகிருஷ்ணன், முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன் , காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘ தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் வீரம் மிகுந்த போராட்டங்களில் ஒன்றாக பதிவாகி இருக்கக்கூடியது தோள்சீலை போராட்டம். அதன் 200-வது ஆண்டு நிறைவு விழாவில் நான் பங்கெடுப்பதிலே மிகுந்த பெருமைப்படுகிறேன். வாய்ப்பினை தந்திருக்கக்கூடிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என பேசினார்.
மேலும், இந்த விழாவை நடத்துவது மூலம் இந்த நாட்டில் எந்த மாதிரியான இழிநிலை இருந்தது என்பதையும் அந்த இழிநிலையானது வீரமிகு போராட்டத்தால் எப்படி அடித்து நொறுக்கப்பட்டது என்பதையையும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு உனர்த்துவதற்காகவே தோள்சீலை 200ஆம் ஆண்டு நிறைவு போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மேலும், நடத்தப்பட வேண்டும். எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…