9 மாதங்கள் முடிந்தது..!முடிவில்லை சீரமைப்பு பணி..!!சிரமத்தில் மக்கள்…!!

Default Image

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே 9 மாதங்களுக்கும் மேல் நடைபெற்று வரும் பாலம் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை – தூத்துக்குடி இடையிலான நான்குவழிச் சாலையில் வல்லநாடு அருகே தாமிரபரணி ஆற்றின் மீது 2 பாலங்கள் கட்டப்பட்டன. கடந்த ஆண்டு இவற்றில் ஒரு பாலத்தில் விரிசல் ஏற்பட்டு, பல்வேறு இடங்களில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து துளைகள் ஏற்பட்டன.

இவற்றை சீரமைக்கும் பணிகள் கடந்த நவம்பர் மாதம் தொடங்கின. இதற்காக பாலத்தின் சிமெண்ட் பூச்சுகளை தகர்த்தபோது, கான்கிரீட் கலவைக்கு மேலே தார் போன்ற பிரத்யேக விரிப்புகள் விரிக்கப்படாதது தெரியவந்துள்ளது. இந்தக் குறைகளைப் போக்கி, பாலத்தை தரமான பொருள்களைக் கொண்டு முறையாக சீரமைக்க வேண்டுமெனவும், விரைவாக பணிகளை முடிக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்