வீட்டில் வைத்து தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண்..! பரிதாபமாக உயிரிழந்த குழந்தை..!

Default Image

கோவையில் வீட்டில் வைத்து பெண் ஒருவர் தானாக பிரசவம் பார்த்ததால், குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு.

இன்று தொழில் நுட்பங்கள் வளர்ந்துள்ள காலகட்டத்தில்,  சமையல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை இணையத்தில் பார்த்து பலரும் தெரிந்து கொள்கின்றனர். ஆனால் பிரசவம் என்பது அப்படி அல்ல, மருத்துவர்களால்  பார்க்கப் பட்டால் தான் அது பாதுகாப்பான ஒன்றாக இருக்கும். இல்லையென்றால், அது ஆபத்தில் தான் போய் முடியும்.

இந்நிலையில் கோவை செட்டி வீதியில் வசித்து வருபவர்கள் விஜயகுமார் -புண்ணியவதி தம்பதியினர். இவர்களுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில், இவர் மீண்டும் கர்ப்பமாகி உள்ளார். இதனையடுத்து, நேற்று பிரசவ வலி ஏற்பட, புண்ணியவதி தனக்கு தானே வீட்டில் வைத்து பிரசவம் பார்த்துள்ளார். அப்போது அவர் தொப்புள் கொடியை சரியாக அறுக்காமல் விட்டதால், குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இதனையடுத்து, அவரது கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை வீட்டில் வைத்தே இறந்து விட்டது என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, தாய் புண்ணியவதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 15042025
Today Live 14042025
Madurai MP Su Venkatesan
Harris Jayaraj
Nellai Palayamkottai 8th student
MK Stalin
sanjiv goenka rishabh pant
Porkodi Armstrong