நாமக்கல் மாவட்டமான மோகனுரில் சர்க்கரை ஆலையில் இருந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்வதற்காக ஒரு லாரியில் 25,000 கிலோ சர்க்கரை மூட்டைகள் வந்துள்ளது.
இந்த லாரியானது நேற்று காலை நெல்லை பக்கத்தில் தாழையூத்தில் இருக்கும் அரசு அரிசி ஆலைக்கு வந்துள்ளது. அரசி குடோனுக்கு அந்த சர்க்கரை மூட்டைகளை இறக்கி வைக்க வந்துள்ளது. அதற்காக லாரியானது அரிசி ஆலைக்கு கொஞ்சம் முன்னாள் ரோட்டின் ஓரத்தில் லாரி நிறுத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய பெய்த மழையால் லாரியின் பின்பக்க டயர்கள் மண்ணுக்குள் இறங்கியது,அதன் பின்னர் பக்கத்தில் இடத்தின் அருகில் 60 அடி ஆழ கிணறு உள்ளது. கிணறுக்குள் குப்பை மற்றும் செடிகள் உள்ளதால் கிணறு இருந்தது தெரியவில்லை.
பின்னர் சர்க்கரை மூட்டைகளுடன் லாரியும் சரிந்து அருகில் உள்ள கிணற்றுக்குள் விழுந்தது. இதனால் தண்ணீருக்குள் விழுந்து 25,000 கிலோ சர்க்கரை கரைந்தது. மேலும் நீண்ட நேர போராடத்தை அடுத்து, கிணற்றில் உள்ள தண்ணீரும் வெளியேற்றப்பட்டு லாரி மீட்கப்பட்டது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…