நாட்டின் நலனுக்காக, நரேந்திர மோடி தான் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில், தொழில்வளாகம் அமைப்பதற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து கே.பி.முனுசாமி, விவசாயிகள் உடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் மத்தியில் அடுத்து யார் ஆட்சி அமைக்கவேண்டும் என கேட்கப்பட்டது.
அதற்கு அவர் கூறியதாவது, நாட்டின் வளர்ச்சி மற்றும் மற்ற நாடுகளுக்கு இணையாக இந்தியாவை வளர்ச்சி அடைய வைப்பதற்கு, பிரதமர் மோடி தன்னை முழுமையாக ஈடுபடுத்தி செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். எங்களைப் பொறுத்தவரை நாட்டின் நலன் தான் முக்கியம்.
அதிமுக தனித்து நிற்குமா அல்லது பாஜக தனித்து நிற்குமா என்று எங்களுக்குள் இடைவெளி ஏற்படுத்த வேண்டாம். நாட்டின் நலனுக்காக நரேந்திர மோடிதான் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…