நாட்டின் நலனே முக்கியம்; மோடி தான் மீண்டும் பிரதமர்-கே.பி.முனுசாமி.!

Default Image

நாட்டின் நலனுக்காக, நரேந்திர மோடி தான் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில், தொழில்வளாகம் அமைப்பதற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து கே.பி.முனுசாமி, விவசாயிகள் உடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் மத்தியில் அடுத்து யார் ஆட்சி அமைக்கவேண்டும் என கேட்கப்பட்டது.

அதற்கு அவர் கூறியதாவது, நாட்டின் வளர்ச்சி மற்றும் மற்ற நாடுகளுக்கு இணையாக இந்தியாவை வளர்ச்சி அடைய வைப்பதற்கு, பிரதமர் மோடி தன்னை முழுமையாக ஈடுபடுத்தி செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். எங்களைப் பொறுத்தவரை நாட்டின் நலன் தான் முக்கியம்.

அதிமுக தனித்து நிற்குமா அல்லது பாஜக தனித்து நிற்குமா என்று எங்களுக்குள் இடைவெளி ஏற்படுத்த வேண்டாம். நாட்டின் நலனுக்காக நரேந்திர மோடிதான் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்