இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் இந்தியா வெளிநடப்பு செய்திருந்தது தமிழர்களுக்கு செய்த துரோகம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு செய்யூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அக்கட்சி தலைவர் திருமாவளவன், முள்ளிவாய்க்கால் ஈழ இனப்படுகொலைக்கு காரணமான ராஜபக்சேவை சர்வதேச குற்ற புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்தப்படும் வகையில் சர்வதேச குற்றவாளி கூண்டில் நிறுத்துவதற்கு ஆதரவான தீர்மானத்திற்கு இந்தியா வாக்களித்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த கும்பல் ராஜபக்சேவை காப்பற்றுவதற்காக, இலங்கை அரசுக்கு ஆதரவாக, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் கொண்டுவந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்காமல், இந்தியா புறக்கணிப்பு செய்திருக்கிறது. இதுதான் பாஜக தெரிந்துகொள்ளுங்கள் என்று கூறி, இந்தியாவின் வெளிநடப்பு தமிழர்களுக்கு செய்த துரோகம் என்றும் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நேற்று இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் நிறைவேறியது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை 22 நாடுகள் ஆதரித்தும், 11 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்திருந்தது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா, நேபாளம், ஜப்பான், இந்தோனோஷியா உள்ளிட்ட 14 நாடுகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…