#Breaking:அலர்ட்…வெள்ள அபாய எச்சரிக்கை – புழல் ஏரியிலிருந்து நீர் திறப்பு 1000 கன அடியாக அதிகரிப்பு !

Published by
Edison

புழல் ஏரியிலிருந்து திறக்கப்படும் நீர் அளவு 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால்,அப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.அந்த வகையில்,தொடர் மழையால் புழல் ஏரி நிரம்பி
வருகிறது.இதனால்,21.20 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் 19.40 அடியாக உயர்ந்துள்ளதால்,இன்று 11 மணியளவில் அணையிலிருந்து வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.

மேலும்,புழல் ஏரிக்கு வரும் மழைநீரின் அளவு தொடர்ந்து அதிகரிப்பதால், உபரிநீர் திறப்பும் படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,புழல் ஏரியிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1000 கன அடியாக அதிகரித்துள்ளது.ஏரிக்கு நீர் வரத்து 3000 கன அடியாக உயர்ந்ததையடுத்து,உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால்,கரையின் இருபுறமும் இருக்கக்கூடிய நாரவாரிக்குப்பம், தண்டல்கழனி,வடகரை,கிராண்ட்லைன் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும்,புழல்,வட பெரும்பாக்கம்,மஞ்சம்பாக்கம்,மாத்தூர்,கொசப்பூர்,மணலி,சடையான்குளம் பகுதி மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

4 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

5 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

6 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

6 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

6 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago