சிலைக் கடத்தல் வழக்கு…!இன்று சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு…!

Default Image

சென்னை உயர்நீதிமன்றம் சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில் இன்று  பிற்பகல் தீர்ப்பு வழங்குகிறது.

சிலைக் கடத்தல் வழக்கு தொடர்பாக  தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், டிராபிக் ராமசாமி ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுவை நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு இன்று  தீர்ப்பு வழங்குகிறது.சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் இன்று  பணிஓய்வு பெற உள்ள நிலையில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடுத்த வழக்கில் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்