பல்வேறு தடைகள் இருந்த போதிலும் அவை அனைத்தையும் தாண்டி வேல் யாத்திரை துவங்கி, இன்று வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது என பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் 6-ம் தேதி தொடங்கிய வேல் யாத்திரையானது, இன்று நிறைவு பெறுகிறது இந்த நிறைவு நாள் நிகழ்ச்சி திருச்செந்தூரில் நடைபெறுகிற நிலையில், இந்த நிகழ்ச்சியில், பல தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனையடுத்து, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது பேசிய அவர் வேல் யாத்திரை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. அது நிறைவு விழா நிகழ்ச்சிகள் திருச்செந்தூரில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் என்றும், எதிர்பார்த்ததைவிட வேல் யாத்திரை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது என்றும், கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி அவர்கள் அதற்குப் பின்புலமாக இருந்தவர்கள் அனைவருக்கும் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கொரோனா ஊரடங்கு காரணமாக திருச்செந்தூரில், உள்ளரங்கில் நிறைவு நாள் விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. பல்வேறு தடைகள் இருந்த போதிலும் அவை அனைத்தையும் தாண்டி வேல் யாத்திரை துவங்கி, இன்று வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது என்றும், நிறைவு நாள் நிகழ்ச்சியில் இருக்கும் தடைகளை உடைத்தெறிந்து பாஜக தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்றும், யாத்திரை மிகப்பெரிய மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…
சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற்…
சென்னை : இன்றயை காலத்தில் AI தொழில்நுட்பம் என்பது பெரிய அளவில் வளர்த்துக்கொண்டு இருக்கும் நிலையில், சினிமாவிலும் அதனை அதிகமாக பயன்படுத்த…
திருநெல்வேலி : திருநெல்வேலி , பாளையம்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இன்று 8ஆம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர்…
லக்னோ : பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…