சென்னை:ஆவணங்களை புதுப்பிக்காத வாகனங்கள் மீது ஆர்டிஓக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசின் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து சரக ஆர்டிஓக்களும் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தகுதிச் சான்று, காப்புரிமைச் சான்று, புகைச் சான்று மற்றும் இதர ஆவணங்கள் புதுப்பிக்கப்படாமல் இருக்கும் வாகனங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசின் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும்,இது தொடர்பாக,தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
“கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊாடங்கு நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து முடிவுற்ற நிலையில் உள்ள அனைத்து வாகனங்களின் ஆவணங்களை புதுப்பிக்க 31.10.2021 முடிய கால அவகாசம் நீட்டித்து உத்தரவிடப்பட்டது. தற்போது கால அவகாசம் முடிவுற்ற நிலையிலும் சில போக்குவரத்து வாகனங்கள் இன்றைய தேதி வரை முடிவற்ற ஆவணங்களை புதுப்பிக்காமல் வாகனங்கள் பொதுச் சாலையில் இயக்கப்படுவதாக தெரிய வருகிறது.
அவ்வாறு இயக்கப்படும் நிலையில் விபத்துகள் ஏற்பட்டால், காப்பீடு வழங்க இயலாத நிலையில் உள்ளது.இதனால் பொதுமக்களின் பயணத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் நிலை ஏற்படுகிறது.
எனவே,அனைத்து சரக அலுவலர்களும் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதகளில், தகுதிச் சான்று, காப்புச் சான்று புகைச் சான்று மற்றும் இதர ஆவணங்கள் புதுப்பிக்கப்படாமல் இயங்கும் வாகனங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை தினசரி மேற்கொண்டு அதன் விபரத்தினை உரிய படிவத்துடன் இவ்வலுவலகத்திற்கு பிரதி திங்கள் காலை 11 மணிக்குள் அனுப்பக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…