#Breaking:அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அரசு அதிரடி உத்தரவு..!

Published by
Edison

12 ஆம் வகுப்பு மாணவர்கள் 10 ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்த்து இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தலைமையாசிரியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களின் உடல்நலன், மனநலனை கருத்தில் கொண்டு 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தார்.

இதனையடுத்து,12-ம் வகுப்பு மாநில பொதுத்தேர்வை ரத்து செய்த மாநிலங்கள், அகமதிப்பீட்டு மதிப்பெண் முறையை 10 நாளைக்குள் உருவாக்கவேண்டும் என்றும், அந்த மதிப்பெண்களை ஜூலை 31ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் இன்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

இந்நிலையில்,12 ஆம் வகுப்பு மாணவர்கள் 10 ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்த்து இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தமிழக தேர்வுத்துறை இயக்குநர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,”அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 10 ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்களை சரிபார்த்து,அதனை நாளை முதல் ஜூன் 30 ஆம் தேதிக்குள்  http://www.dge.tn.gov.in/ என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும்,சரிபார்க்கப்பட்ட சான்றிதழ்களுக்கான பட்டியலை மாவட்ட தேர்வுத்துறை உதவி இயக்குனரிடம் வழங்க வேண்டும்”, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Published by
Edison

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

4 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

5 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

6 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

6 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

6 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago