முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமையன்று யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளை எழுதச் செல்வோர்களுக்கு எந்த தடையும் இல்லை எனவும்,அவர்கள் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்குவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது.இதன்காரணமாக இன்று முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
மேலும்,ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் எனவும்,இருப்பினும் அத்தியாவசியப் பணிகளான மருத்துவப் பணிகள்,மருந்தகங்கள்,பால் விநியோகம்,ATM மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல் டீசல் பங்குகள் போன்றவை இயங்குவதற்கு அனுமதிக்கப்படும் எனவும் அரசு அறிவித்தது.அதன்படி,
இந்நிலையில்,முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமையன்று யுபிஎஸ்சி,டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எழுத மற்றும் நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகளில் பங்கேற்க செல்வோர்களுக்கு பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்குவதாகவும்,முழு ஊரடங்கு நாளில் அவர்கள் பயணம் மேற்கொள்ள எந்த தடையும் இல்லை எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும்,முழு ஊரடங்கு நாளில் போட்டி தேர்வு எழுத செல்வோருக்கு காவல்துறையினர் முழு ஒத்துழைப்பு தருவார்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி,தேர்வுக்கு செல்வோர் தேர்வுக்கூட அனுமதிசீட்டு,நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு கடிதம் ஆகியவற்றை காண்பித்து விட்டு பயணம் செய்யலாம் என்று அரசு கூறியுள்ளது.
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…