முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமையன்று யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளை எழுதச் செல்வோர்களுக்கு எந்த தடையும் இல்லை எனவும்,அவர்கள் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்குவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது.இதன்காரணமாக இன்று முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
மேலும்,ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் எனவும்,இருப்பினும் அத்தியாவசியப் பணிகளான மருத்துவப் பணிகள்,மருந்தகங்கள்,பால் விநியோகம்,ATM மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல் டீசல் பங்குகள் போன்றவை இயங்குவதற்கு அனுமதிக்கப்படும் எனவும் அரசு அறிவித்தது.அதன்படி,
இந்நிலையில்,முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமையன்று யுபிஎஸ்சி,டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எழுத மற்றும் நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகளில் பங்கேற்க செல்வோர்களுக்கு பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்குவதாகவும்,முழு ஊரடங்கு நாளில் அவர்கள் பயணம் மேற்கொள்ள எந்த தடையும் இல்லை எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும்,முழு ஊரடங்கு நாளில் போட்டி தேர்வு எழுத செல்வோருக்கு காவல்துறையினர் முழு ஒத்துழைப்பு தருவார்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி,தேர்வுக்கு செல்வோர் தேர்வுக்கூட அனுமதிசீட்டு,நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு கடிதம் ஆகியவற்றை காண்பித்து விட்டு பயணம் செய்யலாம் என்று அரசு கூறியுள்ளது.
ஹைதராபாத் : லக்னோ அணி பலம் வாய்ந்த அணியான ஹைதராபாத் அணியை நேற்று வீழ்த்திய நிலையில் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்…
டெல்லி : தாய்லாந்து, மியான்மரில் சக்தி வாய்ந்த லநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இது ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவானதாக தகவல்…
பாங்காக் : மியான்மரை தொடர்ந்து தாய்லாந்திலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மியான்மரில் இன்று காலை 11:50 மணியளவில் முதல் சக்தி…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில்…
சென்னை : இன்று (மார்ச் 28) தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் தனியார் மண்டபத்தில் நடைபெற்று…