போக்குவரத்து கழக மேலாளருக்கு கொலை மிரட்டல் !

Default Image

தக்கலை:சுந்தர்சிங் இவர் அடுத்த தொலையாவட்டம் காஞ்சிரங்காட்டுவிளை பகுதியில் வசித்துவருகிறார். அரசு போக்குவரத்து கழக குழித்துறை பணிமனையில் மேலாளராக உள்ளார். இவர் சக ஊழியர்களுடன் நேற்று முன்தினம் காலை , தடம்மாறி இயக்கப்படும் மினி பஸ்களை கண்டறிந்து அவற்றை பிடித்து, கோழிப்போர்விளையில் உள்ள மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
அப்போது மினி பஸ் உரிமையாளர்களான சுந்தர்ராஜ், சுரேஷ்குமார், டான் சர்ச்கேணி ஆகியோர், சுந்தர்சிங்கை தடுத்து நிறுத்தி தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சுந்தர்சிங் தக்கலை போலீசில் புகார் செய்தார்.சுந்தர்சிங் கொடுத்த புகாரின் பெயரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்