#BreakingNews : 3 நாட்கள் நடைபெறுகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்

Default Image

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி நடைபெறுகிறது.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் வரும் 14-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது என்று தமிழக அரசு அறிவித்தது.கொரோனா பரவல் காரணமாக தனிமனித இடைவெளியை பின்பற்றி சென்னை கலைவாணர் அரங்கத்தில் கூட்டத் தொடரை நடத்த பொதுப்பணித்துறை ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூட்டத்திற்கு முன்பாக எம்எல்ஏக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

எனவே சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து பேரவைத் தலைவர்  தனபால் தலைமையில் ஆலோசனை  நடைபெற்றது.இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 14 -ஆம் தேதி முதல் 16 -ஆம் தேதி நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்