சென்னை : தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டம், 2024-ஆம் ஆண்டு இம்மாதம் 24ஆம் தேதி தொடங்கவுள்ளது. கடந்த 2021 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்த பின், தொடர்ந்து மக்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதன் வெளிப்பாடாக, நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் (40\40) வெற்றி கனியாக மாறியுள்ளது. இந்நிலையில், வெற்றி பெற்ற கையோடு, சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, தற்பொழுது அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சட்டப்பேரவை முதன்மை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 24ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் சபாநாயகர் அப்பாவு கூட்டியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 24ஆம் தேதி முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…