234 தொகுதிகளிலும் எந்தவித பாகுபாடின்றி மக்கள் திட்டங்களை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது…! துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
234 தொகுதிகளிலும் எந்தவித பாகுபாடின்றி மக்கள் திட்டங்களை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதுரையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில், ஊதுகுழலில் 2 வகை உண்டு, ஒன்று அடுப்பில் வைத்து ஊதுவது, மற்றொன்று கிருஷ்ணரின் கையில் உள்ள புல்லாங்குழல். அதுதான் அதிமுக கையில் உள்ளது.அதேபோல் கஜா புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கையாக 13 கடலோர மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 234 தொகுதிகளிலும் எந்தவித பாகுபாடின்றி மக்கள் திட்டங்களை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. சிலர் அரசியல் லாபம் கருதி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருவது கண்டிக்கத்தக்கது என்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.