தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றவுடன் தேர்தல் அறிக்கையில் கூறியபடி கொரோனா நிவாரண தொகையாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து,கொரோனா நிவாரண தொகையின் முதல் தவணையான 2,000 ரூபாய் கடந்த மே மாதம் வழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக,குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகையின் இரண்டாம் தவணையான 2,000 ரூபாயினையும்,14 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருள் தொகுப்பினையும்,ஒரே நேரத்தில் பெற்றுச் செல்லும் வகையில் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் சிறப்பு பொருட்கள் வழங்குவதற்காக டோக்கன் அட்டை தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி,கொரோனா நிவாரண தொகையில் இரண்டாம் தவணையான 2,000 ரூபாய் மற்றும் மளிகைப் பொருட்களின் தொகுப்பினை வழங்குவதற்கான டோக்கன்களானது வருகின்ற ஜூன் 11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும்.
இந்த டோக்கன்களின் அடிப்படையில்,2,000 ரூபாய் மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்பினை 15-6-2021 முதல் நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…