தமிழக அரசு – ஆளுநர் விவகாரம்.! உச்சநீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவுகள்….

Published by
மணிகண்டன்

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்தி வருகிறார். கிடப்பில் போட்டு விடுகிறார் என்றும், ஆளுநர் மசோதாக்களுக்கு கையெழுத்திட கால நிர்ணயம் செய்யுமாறும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடர்ந்து இருந்தது .

இந்த மனுவானது கடந்த 6ஆம் தேதி நீதிபதி சந்திரசூட் அடங்கிய அமர்வின் முன் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று (நவம்பர் 10) நடைபெற்றது.

ஆன்லைன் சூதாட்ட தீர்ப்பு – மேல்முறையீடு செய்ய பரிசீலனை செய்யப்படும் : அமைச்சர் ரகுபதி

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு உரிய நேரத்தில் கையெழுத்திடாமல் அரசின் செயல்பாடுகளை ஆளுநர் ஆர்.என்.ரவி முடக்குகிறார், பணி நியமனம் தொடர்பான எந்தவொரு மசோதாவுக்கும் அனுமதி கொடுக்கவில்லை. கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் கோப்புகளுக்கும் அனுமதி கொடுக்கவில்லை என்று தமிழக அரசு வாதத்தை முன் வைத்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், தமிழக அரசு முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த அழகின் விசாரணை வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதற்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து சந்திரசூட் தலைமையிலான நீதிபதி அமர்வு கூறுகையில், அரசியல் சாசன அமர்வின்படி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கவில்லை என்றால், உடனடியாக அதனை திருப்பி அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும். அவ்வாறு மாநில அரசால் மீண்டும் விளக்கம் தரப்பட்டு அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டால், காலதாமதம் இன்றி ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என உத்தரவிட்டனர்.

மசோதாக்களுக்கு ஏன் ஆளுநர் முடிவெடுக்காமல் இருக்கிறார் என்பதை ஆளுநரின் செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

Published by
மணிகண்டன்

Recent Posts

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

53 minutes ago

காஷ்மீர் தாக்குதல் : “விசாரணைக்கு நாங்கள் தயார்!” பாகிஸ்தான் திடீர் அறிவிப்பு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…

1 hour ago

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…

2 hours ago

பாகிஸ்தான் அதிகாரியின் ‘கழுத்தறுப்பு’ சைகையால் வெடித்த சர்ச்சை! வைரலாகும் வீடியோ…

லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…

3 hours ago

திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…

4 hours ago

Live : தவெக பூத் கமிட்டி மாநாடு முதல்… இந்தியா – பாகிஸ்தான் எல்லை பதற்றம் வரை…

சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…

4 hours ago